மரண அறிவித்தல் - திருமதி இராஜேஸ்வரன் சந்திரவதனா

 


குப்பிழானைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரன் சந்திரவதனா அவர்கள் இன்று 07.04.2026 செவ்வாய்க்கிழமை காலை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும், 

காலஞ்சென்ற இராசையா - மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவ கணேசலிங்கம், சிவ முத்துலிங்கம், காலஞ்சென்ற சிவ மகாலிங்கம், சிவ யோதிலிங்கம், இந்திரவதனா, சிவ பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

சஞ்சீபன் (விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையம் - விவசாயத் திணைக்களம்), காயத்திரி (ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம்), இரஜீவன் (Dialog Axiata - Colombo), சுஜீவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

சுதர்சினி (இலங்கை விவசாயக் கல்லூரி - பரந்தன்), குமரன் (ஆசிரியர் - யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்), அனுத்திகா (Liquid Labs - Colombo) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

பிரணவி, யதுணவி, கஜோரிகா, கிஜானிகா, ஆருத்ரன், ஆத்வீகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 08.04.2026 புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக திருநெல்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

Post a Comment

Previous Post Next Post