வடபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்


"காளி கோவில்"  என அழைக்கப்படும் குப்பிழான் வடபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை (30.05.2025) மாலை-06 மணியளவில் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவம் நடைபெற உள்ளது. 

இவ் ஆலய அலங்கார உற்சவத்தில் பத்தாம் நாளான அடுத்த மாதம்-08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணியளவில் அம்பாளுக்கு 108 சங்காபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறும். மறுநாள்-09 ஆம்  திகதி திங்கட்கிழமை வைகாசி விசாகப் பொங்கல் உற்சவமும் இடம்பெறுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, அலங்கார உற்சவ நாட்களில் தினமும் மாலை-06 மணியளவில் அன்னைக்கு அபிஷேக ஆராதனை இடம்பெற்று அம்பாள் வீதி உலா வரும் திருக் காட்சியும் இடம்பெறுமென ஆலய பரிபாலன சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.  


செய்தி - ரவிசாந் 



Post a Comment

Previous Post Next Post