யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட குப்பிழான் வடக்கு - தெற்கு இணைந்த நான்காம் வட்டாரத்தில் இம்முறை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
சவாலுக்கு மத்தியில் குப்பிழானில் தேசியமக்கள் சக்தியை கிராம மக்கள் தோற்கடித்துள்ளனர். தமிழ்த்தேசியம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
குப்பிழானில் வட்டாரம்-04 இல் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை விபரம் வருமாறு
இலங்கைத் தமிழரசுக் கட்சி:- 525
தேசியமக்கள் சக்தி:- 460
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி:- 177
தமிழ்த்தேசியப் பேரவை: - 112
ஈபிடிபி:- 72
வெற்றிபெற்றமை தொடர்பில் வயிரவநாதன் தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவிக்கையில்,
எமக்கு வாக்களிக்காத மக்களையும் சரி சமமாக மதித்து பிரதேசசபை சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப நாளை முதல் எமது சேவைகளைத் தொடர்வோம்.
எமது முதலாவது செயற்திட்டமாக மின் விளக்குகளினை இனங் காண்பதற்காக மின்கம்பங்களிற்கு இலக்கமிடல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எமக்கு வாக்களித்த கிராம மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் எம்மீது வைத்துள்ள எதிர்பார்ப்புகளை உங்கள் சேவகனாக இருந்து நிறைவேற்றுவேன். என்றார்.
Post a Comment