புதிய கட்டிடத்தில் கலைவாணி சனசமூக நிலையமும், குப்பிழான் உப தபால் அலுவலகமும் திறப்புவிழா 14.05.2025 புதன்கிழமை காலை 9 மணிக்கு குப்பிழான் தெற்கில் (குப்பிழான் விவசாய சம்மேளனம் அருகில்) இடம்பெறவுள்ளது.
ஆசிரியர் திரு. க. கமலதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ்ப்பாண பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ்ப்பாண பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர் S.A.D பெர்னாண்டோ, வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலாளர் திரு பா. ஜெயகரன், வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் செயலாளர் திரு அழகேசன் பிரதீபன், சுன்னாகம் தபாலதிபர் திருமதி கவிதா சிவகுமாரன், வலி தெற்கு பிரதேச சபையின் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சர்மிளா மயூரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரு பா, கஜதீபன், குப்பிழான் தெற்கு கிராம அலுவலர் செல்வி பிரதீபா சுதாகரன், குப்பிழான் வடக்கு கிராம அலுவலர் இரத்தினேஸ்வரன் ரமேஸ் ஆகியோர் விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
இந்நிகழ்வுக்கு கிராம மக்கள் அனைவரையும் பங்கேற்று சிறப்பிக்குமாறு கலைவாணி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் அன்போடு அழைக்கின்றார்கள்.
ஊரில் ஆலயங்களை விடவும் வாசிப்பை, அறிவை வளர்க்கும் சனசமூக நிலையங்களே பெருக வேண்டும் என்ற நல்ல நோக்கில் கலைவாணி சனசமூக நிலையத்திற்கு மீளவும் புத்தியிரூட்டியதுடன்,
அஞ்சல் அலுவலகத்தின் சேவைகளும் கிராம மக்களுக்கு இன்றியமையாதது தொடர்ந்தும் கிடைக்க வேண்டும் என்பதனை விளங்கிக் கொண்டு அதற்கும் புதிய கட்டிடத்தை அமைப்பதில் முன்னின்று செயற்பட்ட குப்பிழான் விவசாய சம்மேளனத் தலைவர் செ.நவரத்தினராசா அவர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்.
Post a Comment